சைக்கிளில் சென்ற பெண் லொறியுடன் மோதி பலி

சைக்கிளில் சென்ற பெண் லொறியுடன் மோதி பலி

சைக்கிளில் சென்ற பெண் லொறியுடன் மோதி பலி

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2022 | 11:38 am

Colombo (News 1st) புத்தளம் – கீரியங்கள்ளி – ஆண்டிகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் – அங்குனவில் – அக்கரவெளி பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 53 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) பகல் 2 மணியளவில் இந்த விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது.

கீரியங்கள்ளி பகுதியில் இருந்து ஆண்டிகம பகுதியை நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி – லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக தகவல்களை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்