வௌிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்

யாழ். போதனா வைத்தியசாலையில் வௌிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்

by Staff Writer 09-02-2022 | 11:08 AM
Colombo (News 1st) வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை நாளை (10) முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளது. வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே. நந்தகுமாரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார். நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.