58 இலட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் 

பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 58 இலட்சத்தை கடந்தது

by Staff Writer 09-02-2022 | 9:29 AM
Colombo (News 1st) நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை 58 இலட்சத்தை கடந்துள்ளது. அதனடிப்படையில், இதுவரை 58 இலட்சத்து 41 ஆயிரத்து 518 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை நாட்டில் ஒரு கோடியே 40 இலட்சத்து 21 ஆயிரத்து 430 பேருக்கு 02 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன. ஒரு கோடியே 67 இலட்சத்து 94 ஆயிரத்து 917 பேருக்கு இதுவரை முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்