by Staff Writer 09-02-2022 | 7:47 PM
Colombo (News 1st) கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஹட்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கமும் இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஹட்டனில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு முன்னால் இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.