அம்பியூலன்ஸ் சாரதியை கொல்ல முயற்சி:சந்தேகநபர் கைது

அம்பியூலன்ஸ் சாரதி மீது கொலை முயற்சி: பிரதான சந்தேகநபர் கைது

by Staff Writer 09-02-2022 | 5:13 PM
Colombo (News 1st) பாணந்துறை ஆதார வைத்தியசாலை முன்றலில் அம்பியூலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்த 8 கிராம் ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குருப்புமுல்ல பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திடம் பெறுவதற்கு விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் முன்றலில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.