மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு விசாரணை

மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

by Staff Writer 08-02-2022 | 4:22 PM
Colombo (News 1st) அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதா, இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானத்தை அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமல் ராஜகருணா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக லங்கா சதொச ஊடாக விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து, ஏனைய செயற்பாடுகளுக்காக அவற்றை பயன்படுத்தியமையால், 5 கோடி ரூபாவிற்கும் அதிக அரச பணத்தை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.