English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Feb, 2022 | 4:22 pm
Colombo (News 1st) அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கை தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்வதா, இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானத்தை இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 25 ஆம் திகதி தீர்மானத்தை அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமல் ராஜகருணா, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக லங்கா சதொச ஊடாக விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து, ஏனைய செயற்பாடுகளுக்காக அவற்றை பயன்படுத்தியமையால், 5 கோடி ரூபாவிற்கும் அதிக அரச பணத்தை முறையற்ற ரீதியில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25 May, 2022 | 06:51 PM
10 Mar, 2022 | 03:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS