திருடப்பட்ட 400 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப்

பஸ்யாலயில் திருடப்பட்ட 400 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப்

by Staff Writer 06-02-2022 | 6:17 PM
Colombo (News 1st) நிட்டம்புவ - பஸ்யால பகுதியில் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 400 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப்பொன்று திருடப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், ஜீப்பின் சாவியை எடுத்த பின்னர் ஜீப்பை இயக்கிக்கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீட்டின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இருந்துள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டின் உரிமையாளரால் ஜீப் செலுத்தப்பட்டிருக்கலாமென தான் எண்ணியதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். திருடர்கள் வீட்டிற்குள் புகுந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த அனைவரும் உறக்கத்தில் இருந்துள்ளனர். CCTV காணொளிக்கு அமைவாக கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கி ஜீப் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்