அம்பிகா சற்குணநாதனின் சாட்சி தவறானது

அம்பிகா சற்குணநாதனின் சாட்சியில் பல தவறான விடயங்கள் உள்ளன: வௌிவிவகார அமைச்சு அறிக்கை

by Staff Writer 05-02-2022 | 7:51 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 2022 ஜனவரி 27 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உப குழுவில், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்து பரிமாற்றத்தின்போது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனின் சாட்சியில் பல தவறான விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. '' மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது GSP+ சலுகையை பயன்படுத்த வேண்டும் என திருமதி சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகையை இலங்கை இழந்தால், அதனால் ஏற்படும் இழப்புகள், வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை அதிகரிக்கும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய தொழில்களில் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.'' என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.