மொரட்டு​வை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு குவைத் கடன் உதவி

மொரட்டு​வை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு குவைத் கடன் உதவி

மொரட்டு​வை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு குவைத் கடன் உதவி

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2022 | 3:34 pm

Colombo (News 1st) மொரட்டு​வை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் 1600 மில்லியன் ரூபா குவைத் அரசாங்கத்தினால் கடன் உதவியாக வழங்கப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் இந்த நிதியை வழங்கவுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையை அண்டியதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்