தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2022 | 4:15 pm

Colombo (News 1st) முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, போதுமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்தல் வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவிய போது, பொது இடங்களுக்கு பிரவேசித்தல், முழுமையாக தடுப்பூசி ஏற்றல், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வயதெல்லை மற்றும் தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபடுவதற்கான வரையறைகள் தொடர்பில் விரைவில் பரிந்துரைகள் வௌியிடப்படுமென அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்