முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

by Staff Writer 04-02-2022 | 3:49 PM
Colombo (News 1st) 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளை சேர்ந்தவர்களை கெளரவிக்கும் வகையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அனுமதியுடன், முப்படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. இலங்கை விமானப்படையின் 175 அதிகாரிகளுக்கும் 2,338 உறுப்பினர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதேவேளை, இராணுவ அதிகாரிகள் 480 பேருக்கும் 8,034 உறுப்பினர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.