சனூஸ் முஹம்மத் பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம்

சிரேஷ்ட அறிவிப்பாளர் சனூஸ் முஹம்மத் பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம்

by Staff Writer 04-02-2022 | 7:15 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் சனூஸ் முஹம்மத் பெரோஸின் ஜனாஸா இன்று இரவு பேருவளையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பொறுப்பாளருமான சனூஸ் முஹம்மத் பெரோஸ் நேற்று (03) இரவு காலமானார். செய்தி வாசிப்பில் தனது காந்தக் குரல் மூலம் சனூஸ் முஹம்மத் பெரோஸ் மக்களை கவர்ந்திருந்தார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திலும் சனூஸ் முஹம்மத் பெரோஸ் பணியாற்றியிருந்தார் சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அவர் தனது 61 ஆவது வயதில் நேற்று காலமானார்.