by Staff Writer 03-02-2022 | 1:18 PM
Colombo (News 1st) பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
போட்டித்தன்மையான விலைகளின் கீழ் பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 90 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி நெல் 92 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 95 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.