ஹிஜாஸின் பிணை தொடர்பில் 7 ஆம் திகதி தீர்மானம்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவது தொடர்பில் 7 ஆம் திகதி தீர்மானம்

by Bella Dalima 02-02-2022 | 7:57 PM
Colombo (News 1st) சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவது தொடர்பான கட்டளையை எதிர்வரும் 07 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மேனகா விஜயசுந்தர, நீல் இத்தவெல ஆகியோர் இன்று இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என அறிவித்த புத்தளம் மேல் நீதிமன்றம், பிணை மனுவை நிராகரித்து ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த விடயம் தொடர்பில் நகர்த்தல் பத்திரமொன்றினூடாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர், பிணை வழங்குவது தொடர்பான கட்டளையை பிறப்பிப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்பட்டது.