ரத்கமவை சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து

by Staff Writer 02-02-2022 | 1:23 PM
Colombo (News 1st) காலி - ரத்கம, ரில்லம்ப ரயில் கடவையில் நேற்று (01) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நால்வரது சடலங்களும் அவர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. காலி - பூஸ்ஸ, ரில்லம்ப சந்தியிலுள்ள ரயில் கடவையில் நேற்று (01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 46, 48 , 85 மற்றும் 83 வயதான நால்வர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு ரயில்வே திணைக்களம் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை விளக்கு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் கொள்ள முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.