ரத்கமவை சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து

ரத்கமவை சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2022 | 1:23 pm

Colombo (News 1st) காலி – ரத்கம, ரில்லம்ப ரயில் கடவையில் நேற்று (01) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நால்வரது சடலங்களும் அவர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

காலி – பூஸ்ஸ, ரில்லம்ப சந்தியிலுள்ள ரயில் கடவையில் நேற்று (01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 46, 48 , 85 மற்றும் 83 வயதான நால்வர் உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கு ரயில்வே திணைக்களம் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை விளக்கு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் கொள்ள முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்