கடுமையாக தாக்கப்பட்ட பெண்; கணவருக்கு விளக்கமறியல்

வெட்டுக்காயங்களுடன் பெண் வைத்தியசாலையில் அனுமதி; கணவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 01-02-2022 | 6:05 PM
Colombo (News 1st) ஹப்புத்தளையில் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை நகரின் பிரதான வீதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். பதுளை - தெமோதர பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கணவருக்கும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் தியத்தலாவ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் கணவர் வைத்தியசாலையின் பொலிஸ் காவலிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்