வடமராட்சி மீனவர்களால் முடக்கப்பட்ட இந்திய படகுகள்

by Staff Writer 01-02-2022 | 8:54 AM
Colombo (News 1st) இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 21 இந்திய மீனவர்கள் 02 படகுகளுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) இரவு இலங்கை கடலுக்குள் நுழைந்த குறித்த இந்திய படகுகள், இலங்கை மீனவர்களால் முடக்கப்பட்டதன் பின்னர், கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, வடக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.