இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவிற்கு மக்கள் எதிர்ப்பு

by Staff Writer 01-02-2022 | 9:01 PM
Colombo (News 1st) நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவாவிற்கு மக்கள் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர் பேலியகொடை மெனிங் சந்தையூடாக புதிய பஸ் சேவையை ஆரம்பித்து வைக்க இன்று அவர் சென்றிருந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வெலிவேரிய , கடவத்தை , ஹெந்தலை , கம்பஹா , நிட்டம்புவ உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு வரும் சில பஸ்கள் மெனிங் சந்தையூடாக பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மெனிங் சந்தைக்கு செல்லும் நுகர்வோர் , வர்த்தகர்களின் நலன் கருதி இந்த பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. சில பஸ்களை இராஜாங்க அமைச்சர் கண்காணித்த போது மக்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.