வத்திரானில் காணாமல் போன மீனவர்கள் சடலங்களாக மீட்பு 

by Staff Writer 31-01-2022 | 7:06 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன 02 மீனவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற ஏனையோர் கரை திரும்பிய நிலையில், இருவர் மாத்திரம் காணாமற்போயிருந்தனர். கடற்படையினரின் ஒத்துழைப்புடன் காணாமற்போனவர்களை தேடும் பணிகள் நேற்று முன்தினம் முதல் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இன்றும் சுமார் 10 மீனவப்படகுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், காணாமற்போன மீனவர்கள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமற்போன மீனவர்களின் வலை வெட்டப்பட்டு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.