ஏப்ரல் மாதம் வரை தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க திட்டம்

by Staff Writer 31-01-2022 | 4:14 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.