by Staff Writer 29-01-2022 | 8:16 PM
Colombo (News 1st) நியூஸ்ஃபெஸ்ட் - NDB ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஶ்ரீலங்கா வனிதாபிமான 2021 கிழக்கு மாகாணத்திற்கான போட்டிகள் மட்டக்களப்பில் இன்று (29) நடைபெற்றன.
''நாட்டைக் கட்டியெழுப்பும் மகளிரை வலுப்படுத்துவோம் - இலங்கை வனிதாபிமான'' என்பது நாட்டில் உள்ள தைரியமான பெண்களை ஊக்குவிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும்.
இந்த நிகழ்ச்சியின் கிழக்கு மாகாண போட்டி இன்று காலை மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
NDB வங்கி இந்த திட்டத்துடன் கைகோர்த்துள்ளது
இதன்போது, பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு விற்பனைக்கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தொழில்முயற்சி, இளம் தலைவிகள், தன்னார்வ சேவை, கல்வி, விளையாட்டு மற்றும் சுற்றாடல் முகாமைத்துவம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
இதேவேளை, தொழிற்பயிற்சி அதிகார சபையின் அனுசரணையுடன் பெண்களுக்கான செயலமர்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இன்று நாள் முழுவதும் நடைபெற்றன.
கிழக்கு மாகாண வெற்றியாளர்கள் இன்று பிற்பகல் கௌரவிக்கப்பட்டனர்.