7 மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து சிறுவன் பலி

பம்பலப்பிட்டியில் 7 மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து 15 வயது சிறுவன் பலி 

by Staff Writer 29-01-2022 | 3:35 PM
Colombo (News 1st) பம்பலப்பிட்டி - க்ரெஸ்டர் பிளேஸில் உள்ள 7 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து சிறுவன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான சிறுவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (28) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 15 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.