by Staff Writer 29-01-2022 | 3:16 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு பிரிவினால் 88 மாதிரிகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த 88 பேரில் 82 பேருக்கு ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
ஏனைய 6 பேருக்கும் டெல்டா பிறழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.