by Staff Writer 29-01-2022 | 6:05 PM
Colombo (News 1st) பண்டாரவளை - எட்டம்பிட்டிய, கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நால்வர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் இருந்து சென்றிருந்த சிலர் குளிக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காணாமற்போனவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.