இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்

by Staff Writer 29-01-2022 | 3:40 PM
Colombo (News 1st) இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பாணந்துறையின் பிரபல பாடசாலை அதிபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக 1,50,000 ரூபா இலஞ்ச பணத்தை பெற்றுக்கொள்ளும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.