English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Jan, 2022 | 3:16 pm
Colombo (News 1st) Booster தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பணியகத்தின் பணிப்பாளர், டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்தார்.
Booster தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத நோயாளர்களின் நிலை மோசமடைவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதாக டொக்டர் G.விஜேசூரிய தெரிவித்தார். கடந்த 2 வாரங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது நாளாந்தம் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 15 சிறுவர்கள் கொரோனா தொற்றினால் அனுமதிக்கப்படுவதாக டொக்டர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று மேலும் 23 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,369 ஆக அதிகரித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவர் உள்ளிட்ட 942 பேருக்கு நேற்று (27) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,07,104 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களில் 5,77,030 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளாகிய 14,705 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 Mar, 2022 | 08:03 PM
05 Feb, 2022 | 04:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS