பிரென்டன் டெய்லருக்கு போட்டித்தடை

பிரென்டன் டெய்லருக்கு மூன்றரை வருடங்கள் போட்டித்தடை

by Staff Writer 28-01-2022 | 8:39 PM
Colombo (News 1st) ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் தாமதமாக அறிவித்தமைக்காக சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் டெய்லருக்கு (Brendan Taylor) மூன்றரை வருடங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019 இல் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக இந்திய வர்த்தகர் ஒருவர் தம்மை அணுகியதுடன், 15,000 டொலர்களை வைப்பிலிட்டுள்ளதாகவும் பிரென்டன் டெய்லர் கூறியுள்ளார். தாம் போதைப்பொருள் உட்கொண்டதை காணொளியாக படம்பிடித்த குறித்த வர்த்தகர், தம்மை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுமாறு அச்சுறுத்தியதாக பிரென்டன் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.