மட்டக்களப்பில் சாரதிகளுடன் முரண்பட்ட பொலிஸார்

by Staff Writer 27-01-2022 | 1:31 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் தனியார் போக்குவரத்து பஸ்களுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் நேற்று (26) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸாரினால் இந்த விசேட பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களின்றி மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் பஸ்கள் பரிசோதிக்கப்பட்டன. அனுமதிப்பத்திரங்களின்றி சேவையில் ஈடுபட்ட பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் அவற்றுக்கு தண்டப்பணமும் அறவிடப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பஸ் சாரதிகள் மற்றும் பொலிஸார் இடையே அமைதியின்மை ஏற்பட்டது.