படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 38 பேரை காணவில்லை

by Staff Writer 27-01-2022 | 12:47 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் புளோரிடா - மியாமி பகுதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது காணாமல் போன 38 பேரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடலோர காவற்படையினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் காப்பாற்றப்பட்ட ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த படகானது கடந்த சனிக்கிழமையன்று அகதிகள் 40 பேரை ஏற்றிச்சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது. சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள், பஹாமா தீவு வழியாக புளோரிடா மற்றும் அமெரிக்காவிற்கு பிரவேசித்தல் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. ஆட்கடத்தல் கும்பல்களினால் இவர்கள் அழைத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.