தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

by Staff Writer 27-01-2022 | 6:32 PM
Colombo (News 1st) நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். நாரஹென்பிட்டி - கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இன்று பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே அவர் இதனை கூறினார். 12 மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையின் முதற்கட்டமாக ஐந்து மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.