ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை

ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை: பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு 

by Staff Writer 27-01-2022 | 8:14 PM
Colombo (News 1st) ஜனவரி 31 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருந்தவாறு மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வௌியானது. சுமார் 2 மணித்தியாலங்கள் மின்சார நெருக்கடி தொடர்பில் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர். இதனிடையே, சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு 33,000 லிட்டர் எண்ணெய் தரையிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. இதேவேளை, இந்தியாவின் தேசிய கட்டமைப்புடன் இணையும், எல்லைகளைக் கடந்த மின்சார விநியோகக் கட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட Economic Times பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இத்தகைய திட்டம் ஊடாக அயல் நாடுகள் சிலவற்றுக்கும் நன்மை கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 8 துறைகள் ஊடாக இந்தியாவுடன் பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.