சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் பரிசீலனை

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் பரிசீலிப்பதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

by Staff Writer 27-01-2022 | 8:04 PM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று (26) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்வதாக Financial Times பத்திரிகைக்கு அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். எனினும், தற்போது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய தேவையில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் CNBC தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, எல்லை தாண்டிய நம்பிக்கை நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் ஆகியவற்றை கருத்திற்கொண்டே கடன் தரப்படுத்தலில் இலங்கை தரமிறக்கப்பட்டதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் Fitch தரப்படுத்தலில் மாத்திரம் இலங்கை ஐந்து தடவைகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்