by Staff Writer 27-01-2022 | 9:04 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினத்தில் மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.