அமைச்சரவைக்கு எதிரான மனு மீதான விசாரணை விரைவில்

அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிப்பு

by Staff Writer 27-01-2022 | 9:04 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசா​ரணையை மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அன்றைய தினத்தில் மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.