சம்பள முரண்பாட்டினால் தொழிற்சங்க நடவடிக்கை 

சம்பள முரண்பாட்டினால் தொழிற்சங்க நடவடிக்கை 

by Staff Writer 26-01-2022 | 11:45 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தின் தாதியர்கள், நிறைவு காண் மற்றும் இடைநிலை சுகாதார சேவைக்குரிய தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். தமது சம்பள முரண்பாடுகளுக்கு அதிகாரிகள் இதுவரை தீர்வு வழங்கவில்லை என தெரிவித்தே ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இதனிடையே, இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் இன்று (26) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கு சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதேச மற்றும் வலய அலுவலகங்கள், பரீட்சைகள் திணைக்களம், கல்வி வெளியீட்டு திணைக்களம், கல்வி அமைச்சு ஆகியவற்றின் நடவடிக்கைகளிலிருந்து தமது உறுப்பினர்கள் இன்று (26) விலகியிருப்பதாக கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நீல் அத்துகோரள தெரிவித்துள்ளார்.