இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு உற்சவத்திற்கு இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

by Staff Writer 26-01-2022 | 3:23 PM
Colombo (News 1st) இம்முறை கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். உள்ளூர் யாத்திரிகர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்த உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.