முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி உயிரிழப்பு

by Staff Writer 26-01-2022 | 7:34 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - பார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர்  உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மாமாங்கத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.