ஈர வலயத்தில் அறுவடை வீழ்ச்சி

ஈர வலயத்தில் அறுவடை வீழ்ச்சி

by Staff Writer 25-01-2022 | 3:29 PM
Colombo (News 1st) பெரும்போக அறுவடை குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை ​தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஈர வலயத்தில் இம்முறை அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வறண்ட வலயத்தில் சில பகுதியில் 10 தொடக்கம் 25 வீத அறுவடை வீழ்ச்சியடைந்திருக்கக்கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா குறிப்பிட்டார். இதேவேளை, சிறுபோகத்திற்கு தேவையான உரம் தொடர்பான பரிந்துரைகளை உர செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார். அதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோகிராம் என்ற அடிப்படையில், பாஸ்பரஸ் உரமும் 60 கிலோகிராம் பொட்டாசியமும் பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர ஒரு ஹெக்டேருக்கு 1.5 வீத செறிவிற்கும் அதிகம் கொண்ட, 1000 கிலோகிராம் compost உரத்தையும் வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதிக்குள் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா சுட்டிக்காட்டினார்.