இறால் பண்ணைக்குள் வீழ்ந்து குடும்பஸ்தர் பலி

by Staff Writer 25-01-2022 | 7:08 AM
Colombo (News 1st) புத்தளம் - ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணையொன்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இறால் பண்ணைக்குள் ஒருவரது சடலம் இருப்பதாக பண்ணையின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெவித்தனர். சடலம் பத்துளுஓயா - மகாமாலிய பகுதியைச் சேரந்த 02 பிள்ளைகளின் தந்தையுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.