3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயம் - சுகாதார அமைச்சர் 

by Staff Writer 24-01-2022 | 7:29 PM
Colombo (News 1st) மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே பூரணமாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (24) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.