English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jan, 2022 | 9:06 pm
Colombo (News 1st) நாடுகளிலுள்ள வளங்களை கையகப்படுத்தும் வரை சீனா, அந்தந்த நாடுகளின் சர்வாதிகாரிகள் மற்றும் கொலைகாரர்களுக்கும் நிதி வழங்குவதாக ஜெர்மனிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் (21) அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த உரையின் போது உக்ரைன் தொடர்பிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வௌியிட்டார்.
நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்வதற்கான தகைமைகளை உக்ரைன் பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு மரியாதை மாத்திரமே வேண்டுமெனவும் ஜெர்மனிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார்.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஷ்யா கொண்டிருக்க வேண்டுமென்பதே பல நாடுகளின் விருப்பம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா விரும்புவதாக தெரிவிக்கப்படும் கருத்து முட்டாள்தனமானது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஜெர்மனிய கடற்படைத் தளபதி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
23 Jul, 2022 | 06:07 PM
28 Jun, 2022 | 03:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS