தங்க நகைகள் அபகரிப்பு; யாழில் ஐவர் கைது

மோட்டார்சைக்கிளில் சென்று தங்க நகைகள் அபகரிப்பு; யாழில் ஐவர் கைது

by Staff Writer 22-01-2022 | 3:53 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் மோட்டார்சைக்கிளில் சென்று வீதியில் பயணிப்போரின் தங்க நகைகளை அபகரிக்கும் சம்பவங்கள் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் மூன்று சந்தேகநபர்கள் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட நகைகளை கொள்வனவு செய்யும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம், புத்தூர், கொக்குவில், இளவாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30, 29, 27, 45 மற்றும் 49 வயதான 5 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களிடமிருந்த தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை உருக்கி பெறப்பட்டிருந்த 36 கிராம் தங்கக் கட்டியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்