by Staff Writer 22-01-2022 | 3:35 PM
Colombo (News 1st) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் இறுக்கப்படுத்தவுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திடீரென ஏற்படக்கூடிய மின்சார தடை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, மாலை 4.30 மணிக்கு பின்னர் எவ்வித திருத்தப் பணிகளிலும் தமது தொழிற்சங்கத்தினர் ஈடுபட மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
பதில் பொது முகாமையாளருக்கான நியமனம் மற்றும் மின்சார சபை தலைவரின் முறைகேடான நடவடிக்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து கடந்த புதன்கிழமை (19) தொடக்கம் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.