English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Jan, 2022 | 5:52 pm
Colombo (News 1st) மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி சமுத்திரபுரம் பகுதியில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (21) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றரை வயதான சர்மிலன் கனிஸ்ரிகா என்ற சிறுமியே பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
ஜம்பு பழத்திலிருந்த எறும்புகளை கழுவ முற்பட்டு சிறுமி பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுமியின் உடலில் வேறு காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் இடம்பெற்ற போது சிறுமியின் தாய் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதுடன், இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.
26 Sep, 2021 | 03:26 PM
17 Mar, 2021 | 04:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS