மேலதிக சாட்சியாளர்களை ஆஜர்படுத்துமாறு உத்தரவு

வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு: மேலதிக சாட்சியாளர்களை ஆஜர்படுத்துமாறு உத்தரவு

by Staff Writer 21-01-2022 | 5:24 PM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இன்று உத்தரவிடப்பட்டது. குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் A.C.ரிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் மேலதிக சாட்சியங்கள் குறித்து பொலிஸாரிடம் வினவிய நீதவான், அடுத்த தவணையின் போது மேலதிக சாட்சியாளர்களையும் மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கடந்த வருடம் ஜூன் மாதம் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாவலரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 34 வயதான ஒருவர் உயிரிழந்தார்.