பொரளையில் 6 வீடுகள் தீக்கிரை

பொரளையில் 6 வீடுகள் தீக்கிரை

by Staff Writer 21-01-2022 | 3:30 PM
Colombo (News 1st) பொரளை - கித்துல்வத்த வீதியிலுள்ள 06 வீடுகளில் இன்று (21) காலை தீ பரவியது. வீடுகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் தீ பரவியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். தீயை கட்டுப்படுத்த 06 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது. எவ்வாறாயினும், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.