கடுங்குளிரால் புகலிடக்கோரிக்கையாளர்கள் நால்வர் பலி

அமெரிக்கா - கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி புகலிடக்கோரிக்கையாளர்கள் நால்வர் பலி

by Bella Dalima 21-01-2022 | 4:10 PM
Colombo (News 1st) அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் கடுங்குளிர் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். பனிப்புயலில் சிக்கி குழந்தை ஒன்று அடங்கலாக நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பதின்ம வயது சிறுவனும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்களே கடுங்குளிரினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. மனிடோபா பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்கா - கனடா எல்லைப்பகுதியில்  -31 Degree Fahrenheit வெப்பநிலை பதிவாகியுள்ளது. பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதால், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து புளோரிடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.