English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Jan, 2022 | 3:42 pm
Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்தவாறு 10,000 மெட்ரிக் தொன் டீசல் இன்று காலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
டீசல் கிடைத்துள்ளதால் எவ்வித சிக்கலுமின்றி களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மிதக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான 500 மெட்ரிக் தொன் எண்ணெய்யை பெற்றுக்கொடுக்கவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்தது.
இதனால் மின்வெட்டு இன்றி இன்றும் தொடர்ந்து மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தில் தொடர்ந்தும் நெருக்குடி நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த A நிலையத்தில் 8 மணித்தியாலத்திற்கு தேவையான எண்ணெயும், B நிலையத்தில் 20 மணித்தியாலத்திற்கு தேவையான எண்ணெயும் மாத்திரமே போதுமானதாக உள்ளது.
இந்த மின் நிலையங்களூடாக 108 மெகா வாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது.
இதேவேளை, தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாக இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
20 Jul, 2022 | 08:12 AM
06 Jun, 2022 | 03:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS