English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Jan, 2022 | 8:45 pm
Colombo (News 1st) இம்முறை பெரும்போகத்தின் போது சேதன பசளை விநியோகம் , பயன்பாடு மற்றும் கிடைக்கும் விளைச்சலை ஆராய்ந்து அடுத்த சிறுபோகத்திற்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (21) கமநல சேவைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
அரச தலைவர் ஒருவர் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த இரண்டு வருடங்களில் கைவிடப்பட்டுள்ள வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் திட்டத்தில் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கைவிடப்பட்ட வயல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத காணிகளில் வேறு பயிர்களை பயிரிடுமாறு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
விவசாயிகளுக்கு போகம் மற்றும் வருடாந்த முறையில் 2 இலட்சத்தில் இருந்து 10 இலட்சம் வரை கடன் வழங்கும் 559 கமநல அபிவிருத்தி வங்கிகள் நாடளாவிய ரீதியில் உள்ளன.
அதிக வட்டியில் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்வதை தவிர்க்கும் வகையில் இந்த வங்கியை பலப்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
18 May, 2022 | 06:23 PM
10 May, 2022 | 05:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS